ஹோமாகம விபத்தில் பெண் பலி

226 0

ஹோமாகம  பகுதியில்   இடம்  பெற்ற  விபத்தில்  சிக்கி  பெண்ணொருவர்  உயிரிழந்துள்ளார்.  இந்த விபத்து சம்பவம்  இன்று   செவ்வாய்க்கிழமை   நண்பகல்  12.5  மணியளவில்  இடம்  பெற்றுள்ளதாக பொலிசார்  தெரிவித்தனர்.

ஹேமாகம –  புதிய  பஸ் தரிப்பிடத்திற்கு  அருகில்  தனியார்  பஸ் ஒள்று  பாதசாரி பெண்ணெருவரின்  மீது  மோதுண்டுள்ளது. இதன்போது  படுகாயமடைந்த  பெண்  ஹோமாகம  வைத்தியசாலையில்  அவசர  சிகிச்சை  பிரிவில்  அனுமதிக்கப்பட்ட  நிலையில்  சிகிச்சைப்பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர்  கடுவெல  பகுதியை  சேர்ந்த  85  வயதுடைய  ஜெயகொடிகே  தொன்  சீலவதி என்பவர் என  அடையாளம்  காணப்பட்டுள்ளது.

அவருடைய  சடலம்  பிரேத  பரிசோதனைகளுக்காக   வைத்தியசாலையின்  பிரேத  அறையில் வைக்கப்பட்டுள்ளது.  விபத்து  தொடர்பிலான  மேலதிக  விசாரணைகளை   ஹேமாகம  பொலிசார்  மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.