தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக சரித்திரமில்லை – இராதாகிருஷ்ணன்

193 0

இலங்கை வரலாற்றில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக சரித்திரம் இல்லையென அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கொட்டகலையில் இன்று  இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “இந்த நாட்டின் வரலாற்றில் கடந்த 70 வருட காலமாக மாறி மாறி வருகின்ற அரசாங்கங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிலையான உறுதியான ஒரு தீர்வினை பெற்றுக்கொடுத்ததாக சரித்திரம் இல்லை.

ஆகவே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று நினைத்து வாக்களிப்பதைவிட இந்த நாட்டில் ஒரு அரசாங்கம் வர வேண்டும் என நினைத்துதான் வாக்களிக்க வேண்டிய ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்” என மேலும் தெரிவித்தார்.