ஜனாதிபதி வேட்பாளராக மக்கள் என்னை எதிர்பார்த்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது-சஜித்

193 0

ஜனாதிபதி வேட்பாளராக பொது மக்கள் என்னை எதிர்பார்த்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. வேட்பாளராகக் களமிறங்குவதற்கான நடவடிக்கைகளும் வெற்றிகரமாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று வீடமைப்பு , நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.