காஷ்மீர் 370…

372 0

பவ­ளங்கள் போல  மின்னும் பனிச்­சி­க­ரங்கள், துலிப் மலர்கள் நிறைந்த ஆசி­யாவின் மிகப்­பெ­ரிய பூந்­தோட்டம் உள்­ளிட்ட பல்­வேறு பூங்­காக்கள், உலக புகழ்­பெற்ற காஷ்மீர் ரோஜாக்கள்,அப்­பிள்கள், வற்­றாத நீல நிற ஏரிகள், பசுமை படர்ந்த  உயர்ந்த மலைகள்,  அதன் இடுக்கில்  பல ஆறு­களும் அரு­வி­களும் பாயும் அழகும் வளமும்  நிறைந்த பள்­ளத்­தாக்­குகள்  என   மொத்த இயற்கை அழ­கையும்  தன்­ன­கத்தே கொண்­டுள்ள   அழ­கிய  பிர­தே­சமே இந்­தி­யாவின் வட­கோ­டியில்  அமைந்­துள்ள காஷ்மீர் ஆகும்.

17ஆம் நூற்­றாண்டில் முக­லாய மன்னர் ஜகாங்கீர் காஷ்மீர் பள்­ளத்­தாக்­கிற்கு வந்த போது ‘பூமியில்  சொர்க்கம் என்ற ஒன்று எங்­கா­வது இருக்­கு­மானால் அது இதுதான்’ என்று தால் ஏரியில் இருக்கும் போது சொன்­னாராம். ஆனால் காலம் இந்தச் சொர்க்­க ­பூ­மியின் நிலையை மாற்­றி­விட்­டது. பேரா­சை­களும் அதி­கார மோகங்­களும்  காஷ்மீர் ரோஜாக்­களை உதிரத்­தில் மூழ்­க­டித்து உதி­ர­ச் செய்து விட்­டன.  போராட்டம், குண்­டு ­வெ­டிப்­புகள், துப்­பாக்­கிச்­சூடுகள்,  படு­கொ­லை கள்  என வன்­முறை தேச­மாக காஷ்மீர் மாறி­விட்ட  நிலையில்  காஷ்­மீ­ருக்­கான சிறப்பு அந்­தஸ்து இந்­திய அரசால் தற்போது நீக்­கப்­பட்­டுள்­ளமை பல்­வேறு சர்ச்­சை­களை உரு­வாக்­கி­யுள்­ள­தோடு உலக அளவில் பெரும் பேசு­பொ­ரு­ளாக மாறி­யுள்­ளது. இது தொடர்பில்  நாம்   நோக்­க­ வேண்­டு­மாயின் இந்­திய சுதந்­திரம் மற்றும் அது  இரண்­டாகப் பிரிந்த காலத்துக்குச் செல்ல வேண்டும்.

ஆம் கால­னித்துவ ஆட்­சியின் கீழ் பாரதம் கட்­டுண்டு கிடந்த நிலையில் சுதந்­திரப் போராட்­டங்­களின் எதி­ரொ­லியாய் 1947ஆம் ஆண்டு  பிரிட்டிஷ் ஆட்சி முடி­வுக்கு வந்து, இந்­துக்கள் பெரும்­பான்­மை­யாக வாழ்ந்த பகுதி இந்­தியா என்றும், முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழ்ந்த பகுதி பாகிஸ்தான் என்றும் பிரி­வினை ஏற்­பட்­டது.

இதன்­போது  மன்­ன­ராட்சி மாநி­லங்­க­ளுக்கு மூன்று தெரிவு வாய்ப்­புகள் தரப்­பட்­டன. – சுதந்­திர நாடாக இருப்­பது, இந்­தியாவுடன் இணைவது அல்­லது பாகிஸ்­தா­னுடன் இணை­வது என்­ப­வை­யாக அவை இருந்­தன.

“ஆகஸ்ட் 1947இல் பிரிட்­ட­னிடம் இருந்து இந்­தியா சுதந்­திரம் பெற்­ற­போது, இந்­தி­யாவின் நிலப்­ப­ரப்பில் ஐந்தில் இரண்டு பங்கு அள­வுக்கு வைத்­தி­ருந்த, 99 மில்­லியன் மக்கள் தொகையைக் கொண்­டி­ருந்த 565 மன்­ன­ராட்சி மாகா­ணங்­களின் ஆட்­சி­யா­ளர்கள் இந்­தியா அல்­லது பாகிஸ்தான் என்ற புதிய நாடு­களில் எந்த நாட்­டுடன் சேரு­வது என்­பதை முடிவு செய்ய வேண்­டி­யி­ருந்­தது” என்று ‘சர்ச்­சையில் காஷ்மீர்’ என்ற புத்­த­கத்தின் ஆசி­ரியர் விக்­டோ­ரியா ஸ்ச்சோபீல்ட் குறிப்பிட்டுள்ளார்.

ஹைத­ராபாத் ஜுன்­னாஹத் மற்றும் ஜம்மு காஷ்­மீரைத் தவிர மற்ற மன்­ன­ராட்சி மாகா­ணங்கள் அனைத்தும் இது­ கு­றித்து முடிவு எடுத்­து­விட்­டன.

இந்­தி­யாவும் பாகிஸ்­தானும் 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுதந்­திரம் பெறு­வ­தற்கு முன்பே காஷ்­மீ­ருக்­காக கடு­மை­யாக போட்­டி­யிட்­டு­க் கொண்­டன.

இந்­நி­லையில், எந்த நாட்­டுடன் சேரு­வது என்­பதை ஜம்மு காஷ்மீர் ஆட்­சி­யாளர் மகா­ராஜா ஹரிசிங்கால் முடிவு செய்ய முடி­ய­வில்லை. ஜம்மு காஷ்மீர் சுதந்­திர நாடாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்­பினார் என்று ஒரு கருத்து நில­வு­கி­றது.

காஷ்மீர் மன்னர் ஹரி சிங் ஓர் இந்து. ஆனால் காஷ்­மீரில் வசித்­த­வர்­களில் பெரும்­பா­லானோர் இஸ்­லா­மி­யர்­க­ளாக இருந்­தனர். இதனால் இந்­தி­யா­வுடன் சேர்­வதா அல்­லது பாகிஸ்­தா­னுடன் இணை­வதா என்ற கேள்வி தொடர்ந்­தது.

ஜம்மு மற்றும் சுற்­றுப்­ப­குதி மக்கள் இந்­தி­யா­வுடன் இணைய விரும்­பினர். அதே­வே­ளையில் காஷ்­மீரின் மேற்கு பகு­தியைச் சேர்ந்­த­வர்கள் பாகிஸ்­தா­னுடன் இணைய விரும்­பினர்.

உறு­தி­யான முடிவு எடுக்­கப்­ப­டாத அந்தச் சூழ்­நி­லையில் “வர்த்­தகம், பயணம், தகவல் தொடர்பு சேவை­களை தடை­யின்றி தொடர்­வ­தற்கு பாகிஸ்­தா­னுடன் அவர் `நிகழ்­நிலை’ ஒப்­பந்தம் ஒன்றில் கையெ­ழுத்­திட்­ட­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது.

இந்­நி­லையில் 1947-ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் பாகிஸ்தான் பழங்­குடி மக்­களைக் கொண்ட படை காஷ்­மீ­ருக்குள் நுழைந்­தது. தற்­போ­தைய பாகிஸ்தான் ஆக்­கி­ர­மிப்பு காஷ்மீர் பகு­தியை சுற்றிவளைத்­தது. பாகிஸ்தான் இரா­ணுவம் பின்­பு­லத்திலிருந்து செயல்­பட்­ட­தாகக் கூறப்­ப­டு­கின்­றது.

அது மகா­ரா­ஜா­வுக்கு சவா­லான கால­கட்டம். ஒரு­புறம் சட்டம், ஒழுங்கு நிலைமை மோச­மாகிக் கொண்­டி­ருக்­கி­றது. மறு­புறம் மலைவாழ் பழங்­குடி மக்­களால் அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்­ளது.

அவர் ஒரு வாய்ப்பைத் தேர்வு செய்­வ­தற்­கான அவ­காசம் குறைந்து கொண்டே போனது.

அப்­போது வேறு வழி­யில்­லாத சூழலில் மன்னர் ஹரி சிங், இந்­தி­யாவின் உத­வியைக் கோரினார். காஷ்­மீரை இந்­தி­யா­வுடன் இணைக்க அவர் சம்­ம­தித்தார். அப்­போது பிர­தமர்  ஜவ­ஹர்லால் நேரு மற்றும் மன்னர் ஹரி சிங் இடையே ஒப்­பந்தம் கையெ­ழுத்­தா­னது. காஷ்­மீரின் பாது­காப்பு, வெளி­வி­வ­கா­ரங்கள் மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் இந்­தி­யா­விடம் ஒப்­ப­டைக்கப்பட்­டன. ஆயினும் காஷ்­மீ­ருக்கு தனிக் கொடி, அர­சி­ய­ல­மைப்பு என்­பன இருந்­தன.

காஷ்மீர் இந்­தி­யா­வுடன் இணைய ஒப்­புக்­கொண்­டது. அதன் பாது­காப்­புக்கு இந்­தியா முழுப் பொறுப்­பேற்­றது. இருப்­பினும் மகா­ராஜா கட்­டா­யத்தின் பேரில் செயல்­பட்­டி­ருக்­கிறார் என்று பாகிஸ்தான் கூறி­யது. பாகிஸ்­தா­னுடன் நிகழ்­நிலை ஒப்­பந்தம் அமுலிலுள்ள சூழ்­நி­லையில் இந்­தி­யா­வுடன் ஒப்­பந்­தத்தில் கையெ­ழுத்­திடும் உரிமை அவ­ருக்குக் கிடை­யாது என்று பாகிஸ்தான் கூறி­ய­தோடு காஷ்­மீரின் குறிப்­பிட்ட பகு­தியை பாகிஸ்தான் ஆக்­கி­ர­மித்துக் கொண்­டது. இதனால் அக்­போ­தைய பாரத பிர­தமர் நேரு, ஐ.நா.விடம் முறை­யிட்டார். இதனைத் தொடர்ந்து ஐ.நா.சபையின் தீர்­மா­னத்­தின்­படி பாகிஸ்தான் படை­களும் தங்கள் பகு­திக்குள் இருக்க உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது. தற்­போ­தைய நிலையில் கட்­டுப்­பாட்­டுக்­கோடு உரு­வாக்­கப்­பட்­டது. இன்­ற­ளவு­ம் அதுவே காஷ்­மீரின் பாகிஸ்­தா­னு­ட­னான தார்­மீக எல்­லை­யாக இருந்து வரு­கி­றது.

ஆயினும் அதன்­ பின்­னரும் காஷ்­மீ­ருக்­காக  1965  மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் இரண்டு நாடு­களும் சண்­டை­யிட்­டன. இந்தச் சம­யத்தில் இரு நாடு­களும் அணு ஆயுதம் கொண்ட நாடு­க­ளாக தங்­களை பிர­க­ட­னப்­ப­டுத்திக் கொண்­டி­ருந்­தன. இன்று வரை இந்த இரு நாடு­களும் காஷ்­மீ­ருக்­காகப் போரா­டு­கின்­றன.

இந்­நி­லையில் காஷ்­மீ­ருக்­கான சிறப்பு அந்­தஸ்து இந்தியாவால் நீக்­கப்­பட்­டமை பெரும் சர்ச்­சையை உரு­வாக்­கி­யுள்­ளது.  அந்தச் சிறப்பு அந்­தஸ்து என்ன என்­பதைப் பார்ப்போம்.

1950இல் இந்­திய அர­சியல் சாசனம் அமு­லுக்கு வந்­த­தோடு  காஷ்­மீ­ருக்கு அர­ச­மைப்பின் 370 சட்­டப்­ பி­ரிவின் மூலம் சிறப்பு அந்­தஸ்து அளிக்­கப்­பட்­டது.

இந்­திய அர­ச­மைப்பின் 370 சட்­டப் ­பி­ரி­வா­னது, மத்­திய அர­சுக்கும், ஜம்மு -– காஷ்­மீ­ருக்­கு­மான உறவின் ஓர் எல்லைக் கோடாக பார்க்­கப்­ப­டு­கி­றது.

சட்­டப்­பி­ரிவு 370இன் படி, பாது­காப்பு, வெளி­யு­றவு விவ­கா­ரங்கள் மற்றும் தகவல் தொடர்பு விஷ­யங்­களைத் தவிர, வேறு ஏதேனும் குறித்து சட்டம் இயற்ற வேண்டும் என்றால், மத்­திய அரசு அம்­மா­நி­லத்தின் அனு­ம­தியைப் பெற வேண்டும்.

அம்­மா­நி­லத்தின் ‘நிரந்­தர குடி­யா­ளர்கள்’ யார் என்­பதை வரை­ய­றுப்­பது அர­ச­மைப்பின் பிரிவு 35A. இது சட்­டப்­பி­ரிவு 370இ-ன் ஒரு பகு­தி­யாகும். இதன்­படி, இந்­தி­யாவின் மற்ற மாநி­லங்­களில் வசிப்­ப­வர்கள், ஜம்மு காஷ்­மீரில் நிலமோ அல்­லது சொத்தோ வாங்க முடி­யாது.

இந்த சிறப்பு அந்­தஸ்தால், அர­ச­மைப்பின் சட்­டப்­பி­ரிவு 356, ஜம்மு  -– காஷ்மீர் மாநி­லத்­துக்கு பொருந்­தாது. இதனால் அம்­மா­நில அரசை கலைக்கும் அதி­காரம், இந்­திய குடி­ய­ரசுத் தலை­வ­ருக்குக் கிடை­யாது.

காஷ்மீர் பெண்கள், வேறு மாநி­லத்தைச் சேர்ந்­த­வரைத் திரு­மணம் செய்தால், காஷ்­மீரில் நிலம் வாங்கும் உரி­மையை இழக்­கி­றார்கள். அதே வேளை, ஆண்கள் வேறு மாநி­லத்தைச் சேர்ந்த பெண்­களை மணம் புரிந்தால், அங்கே நிலம் வாங்க உரிமை உண்டு.இந்­திய தேசியக் கொடி அல்­லாது, அம்­மா­நி­லத்­துக்கு என்று தனிக் கொடி உள்­ளது.

நாட்டில் பொரு­ளா­தார அவ­சர நிலையை அமுல்­ப­டுத்த வழி­வகை செய்யும் சட்­டப்­பி­ரிவு 360-ம் ஜம்மு காஷ்மீர் மாநி­லத்­துக்குப் பொருந்­தாது.

அதா­வது அம்­மா­நி­லத்தில் பொரு­ளா­தார அவ­சர நிலையை அறி­விக்க குடி­ய­ர­சுத் ­த­லை­வ­ருக்கு அதி­காரம் கிடை­யாது. மற்ற நாடு­க­ளுடன் போர் ஏற்­பட்டால் மட்­டுமே அங்கு அவ­சர நிலையை பிர­க­ட­னப்­ப­டுத்த முடியும்.

அம்­மா­நி­லத்தில் அமை­தி­யற்ற சூழல் மற்றும் வன்­முறை நில­வி­னால்­கூட, குடி­ய­ர­சுத் ­த­லை­வரால் அவ­சர நிலை அறி­விக்க முடி­யாது என்று இதன்­மூலம் தெளி­வா­கி­றது. ஜம்மு காஷ்மீர் அரசு பரிந்­துரை செய்தால் மட்­டுமே அவ­சர நிலையை பிர­க­ட­னப்­ப­டுத்த முடியும்.

இம்­மா­நி­லத்தின் எல்­லை­களை குறைக்­கவோ அல்­லது கூட்­டவோ முடி­யாது.

இதே­வேளை  காஷ்மீர் மக்­க­ள் இந்­தியக் குடி­ய­ர­சுடன் தொடர்ந்து நீடிப்­பதா அல்­லது இதில் இருந்து வெளி­யே­று­வதா என்ற நிலைப்­பாட்டை முடிவு செய்­வ­தற்கு அந்த மக்­க­ளுக்கு வாய்ப்பளிப்­பது. அதாவது பொதுவாக்கெடுப்பு நடத்தலாம் என்று உறு­தி­மொழி அளிக்கப்பட்­டுள்­ளது. ஆனால் பொது­வாக்­கெ­டுப்பு இன்­று­ வரை  நடத்­தப்­ப­ட­வில்லை.

இந்­திய அரசின் மூலம் உரு­வாக்­கப்­படும் புதிய சட்­டங்கள் எதையும் விரும்­பாத பட்­சத்தில், அதை நிரா­க­ரிக்கும் உரி­மையை ஜம்மு  காஷ்மீர் மாநி­லத்­துக்கு அர­ச­மைப்பு சட்­டப்­பி­ரிவு 370 வழங்­கி­யது. ஆனால், இந்­தி­யா­வுடன் காஷ்மீர் இணைந்த பிறகு, நாடு மு­ழு­வதும் அமுல்­ப­டுத்­தப்­பட்ட பல்­வேறு புதிய சட்­டங்கள், குடி­ய­ரசுத் தலை­வரின் ஆணையின் மூலம், அர­ச­மைப்பு சட்­டப்­பி­ரிவு 370இல் திருத்தம் மேற்­கொள்­ளப்­பட்டு, ஜம்மு -– காஷ்­மீ­ரிலும் அமுல்­ப­டுத்­தப்­பட்­டு­விட்­டது. ஜம்மு  -– காஷ்மீர் மாநி­லத்தைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு சிறப்பு அதி­கா­ரத்­தின்­படி இரட்டைக் குடி­யு­ரிமை அளிக்­கப்­ப­ட­வில்லை.

ஜம்மு -– காஷ்­மீ­ருக்கு தனியே அர­ச­மைப்பு இருந்­தது என்­பது உண்­மையே. இந்தச் சிறப்பு அர­ச­மைப்பு 1957ஆம் ஆண்டு ஜன­வரி 26 அன்று நடை­மு­றைக்கு வந்­தது. ஜம்மு  -– காஷ்­மீரின் அர­ச­மைப்பு என்­பது, இந்­திய அர­ச­மைப்பு சட்­டப்­பி­ரிவு 370இன் கீழ் முழு­மை­யாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டது. இவ்­வாறு பல சந்­தர்­பங்­களில் காஷ்­மீ­ருக்­கான 370 ஆவது சட்­டப்­பி­ரிவு நீர்த்­து­ப்போன சந்­தர்­ப்பங்­களும் உள்­ளன. இந்­நி­லையில் காஷ்­மீ­ருக்­கான போட்டி இந்­தியா, பாகிஸ்தான் ஆகிய இரு­ நா­டு­க­ளுக்­கு­மி­டையில் தொடர்ந்­தது.  கூடவே இந்­தியா இரா­ணு­வத்­தி­ன­ருக்கு எதி­ரான தீவி­ர­வாத தாக்­கு­தல்­கள் காஷ்­மீ­ரிலும்  எல்லை தாண்­டியும் தொடர்ந்­தன. பொதுமக்களும் தங்களது சுதந்திரம் வேண்டும். பாகிஸ்தான் மற்றும் இந்தியா தங்களுக்கு தேவையில்லை. எங்களது நிலம் எமக்குரியது என்று  பல்வேறுபோராட்டங்களில் ஈடுபட்டனர். இதில் உயி­ரி­ழப்­புகள் தவிர்க்க முடி­யா­தவையாக மாறின.

கடந்த 10 ஆண்­டு­களில் அதிக வன்­முறை மற்றும் உயி­ரி­ழப்­பு­களைச் சந்­தித்த ஆண்டு 2018 என பாது­காப்பு அமைப்­பு­களின் புள்­ளி­வி­வ­ரங்கள் தெரி­விக்­கின்­றன. இறந்­த­வர்­களில் பாதிக்கும் மேலா­ன­வர்கள் ஆயுதப் போராட்டக் குழுக்­களைச் சேர்ந்­த­வர்கள்.

இந்நிலையில், இவ்வருடம்  பெப்­ர­வரி – புல்­வா­மாவில் துணை இரா­ணு­வப்­ப­டை­யினர் மீது ஜெய்ஷ்-­ இ -­மு­க­மது நடத்­திய தாக்­கு­தலில் 40க்கும் மேலான படை­யினர் கொல்­லப்­பட்­டனர். இந்­தி­யா-­,பா­கிஸ்தான் இடையே மீண்டும் பதற்றம் தொடங்­கி­யது. பாகிஸ்தான் எல்­லைக்குள் இந்­தி­யாவும், இந்­திய எல்­லைக்குள் பாகிஸ்­தானும் நுழைந்து மாறி மாறித் தாக்­குதல்களை நடத்­தின.

இந்­நி­லையில் ஜம்­மு  -– -­காஷ்மீர் மாநி­லத்­துக்கு சிறப்பு அந்­தஸ்தை வழங்கும் அர­சி­ய­ல­மைப்பின் 35-ஏ பிரிவு மற்றும் 370ஆவது பிரிவை இரத்து செய்ய மோடி தலைமையிலான  பா.ஜ.க. அரசு முயல்­வ­தாக தக­வல்கள் பர­வின. ஏனெனில் ஜம்மு, காஷ்­மீ­ருக்கு சிறப்பு அதி­காரம் அளிக்கும் அர­ச­மைப்பு சட்­டப்­பி­ரிவு 370ஐ நீக்குவோம் என்று 2014 மற்றும் 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது பா.ஜ.க. வாக்குறுதி அளித்திருந்தது.

இதற்கிணங்க, இந்திய அரசமைப்பு சட்டப்பிரிவு 370, உட்பிரிவு 1இன் படி, ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புரிமைகளைப் பறிக்கும் வகையிலான உத்தரவை இம்மாதம் ஐந்தாம் திகதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்தார். காஷ்மீரின் முக்கிய அரசியல் தலைவர்கள் அனைவரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு தொலைதொடர்புகள் அனைத்தும் முடக்கப்பட்டு இராணுவக் கட்டுப்பாட்டுடன் காஷ்மீரிகளின் காஷ்மீர்  விரும்பியோ விரும்பாமலோ ஜம்மு – காஷ்மீர்,   லடாக் என பிரிக்கபட்டு இந்தியாவாக மாற்றப்பட்டுவிட்டது. இது இந்திய பாதுகாப்பு க்கான அத்தியாவசியமான அதிரடி நடவடிக்கை என்று பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியை பாராட்டினாலும்   எதிர்க்கட்சிகளும் விஜய் சேதுபதி உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்களும் கடுமையான எதிர்பை பதிவு செய்துள்ளனர்.

அதிகாரத்தினால் எதனையும் சாதிக்கலாம். தங்களது நிலம் தங்களது உரிமை என்று தனி சுதந்திரத்தை விரும்பி போராடும்  காஷ்மீரிகளின்  மனநிலை என்ன என்பதை யாரும் உணர்வதாக இல்லை. காலம் அனைத்தையும் மாற்றலாம். ஆனால், பூமியின் சொர்க்கமாகத் திகழ்ந்த காஷ்மீரின் காற்றில்  கலந்த அந்த மண்ணுக்குரிய அப்பாவி மக்களின்   இரத்த வாடை காலங்கள் கடந்தாலும் மாறாது.

குமார் சுகுணா