நியமிக்கப்படவுள்ள புதிய ஆளுநர் ஒரு வருட பதவி காலத்திற்காக மாத்திரமே நியமிக்கப்படவுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதனிடையே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் மத்திய வங்கி கட்டிடத்தில் தற்போது முக்கிய கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, மத்திய வங்கியின் பணியாளர்களுடன், ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துரையாடல் நடத்துவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில், நாளையுடன் தமது பதவிக்காலம் நிறைவுறும் மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் அர்ஜூன மகேந்திரனும் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநர் இன்னும் சில மணி நேரத்தில் அறிவிக்கப்படுவார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் அறிவித்திருந்தார்.
கிராந்துருகோட்டையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனை தெரிவித்திருந்தார்.
- Home
- முக்கிய செய்திகள்
- புதிய ஆளுநரின் பதவிக்காலம் ஒரு வருடத்திற்கு மாத்திரமே
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025 -
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

