அதிக பாதிப்புகளை கொண்ட களைநாசினிகளுக்கு முற்றாக தடை – ஜனாதிபதி உத்தரவு

612 0

1467204466_1134956_hirunews_weedicides-with-destructive-effectsஅதிக பாதிப்புகளை கொண்ட களைநாசினிகளுக்கு முற்றாக தடை விதிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
சுற்றாடல் துறை அதிகாரிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே, ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.
சில களைநாசினிகள் பயன்படுத்தப்படுவதனால் மண் வளம் தாக்கத்திற்கு உட்படுவது கண்டறியப்பட்ட நிலையிலேயே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அதிக பாதிப்புகளை கொண்ட களைநாசினிகளை இறக்குமதி செய்தல், விநியோகித்தல், பயன்படுத்தல் என்பவற்றுக்கு தடை விதிக்கப்பட உள்ளது.

Leave a comment