அரசாங்கத்துக்கு வியாழன் வரை காலக்கேடு !

238 0

சுகாதார  துறையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக  அரசாங்கத்திற்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை கால அவகாசம்  விடுத்துள்ள அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தகுந்த  தீர்வு  இன்றேல், நாடுதழுவிய ரீதியில் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் எச்சரித்துள்ளது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட  ஊடகவியலாளர் சந்திப்பு அச் சங்கத்தின் தலைமையகத்தில் இன்றைய தினம் இடம்பெற்றபோதே அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்திய ஹரித அளுத்கே மேற்கண்டவாறு கூறுனார்.

நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் அத்தியாவசிய  மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் தரமற்ற  மருந்துப்பொருட்கள் கொள்வனவின் காரணமாக பாரிய  பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது.

ஆகவே இந்த பிரச்சினை தொடர்பில் உரிய தரப்பினருக்கு எடுத்து  கூறியும் இதுவரையில் எத்தகைய நடவடிக்கைகளும்  எடுக்கப்படவில்லை இதன் காரணமாகவே மேற்கண்ட தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.