முரண்பாடுகளைக் களைந்து சில தினங்களில் ஒப்பந்தத்தை கைச்சாத்திட தீர்மானம்- அகி­ல

306 0

ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மையில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் கட்­சிகள் இன்று பொதுக்­கூட்­ட­ணியை அமைப்­ப­தற்­கான உடன்­ப­டிக்­கையில்  கைச்­சாத்­திட தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்த போதிலும் பொதுக் கூட்­டணி அமைக்கும் தீர்­மானம்  ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது. ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் யாப்­பினை திருத்தும் வரையில் பொதுக்­கூட்­ட­ணியை அமைக்கும் தீர்­மா­னங்­களை ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக ஐக்­கிய தேசிய கட்­சியின்  பொதுச் செய­லரும்  அமைச்­ச­ரு­மான அகி­ல­விராஜ் காரி­ய­வசம் உறு­திப்­ப­டுத்­தினார்.

ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மையில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் கட்­சிகள் மற்றும் புதிய கட்­சிகள் இணைந்து பொதுக் கூட்­ட­ணியை  இன்­றைய தினம் அமைக்க தீர்­மானம் எடுக்­கப்­பட்ட போதிலும் கூட கடந்த சில தினங்­க­ளாக கட்­சிக்குள் நிலவும் மாற்றுக் கருத்­துக்கள் கார­ண­மாக உறு­தி­யான தீர்­மா­னங்­களை எடுக்க முடி­யா­தி­ருந்­தது.

இந்­நி­லை­யி­லேயே   நேற்று முன்­தினம் இரவு   ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் கட்சி தலை­வர்கள்  கூட்டம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் அல­ரி­மா­ளி­கையில் கூடி­யது.

இதன்­போதே இவ்­வாறு ஒரு சில தினங்­க­ளுக்கு கூட்­ட­ணியை அமைக்கும் செயற்­பாட்டை ஒத்­தி­வைப்­ப­தற்­கான  தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது,

இது குறித்து அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வ­ச­மிடம் வின­வி­ய­போது அவர் குறிப்­பி­டு­கையில்,

நாம் ஐக்­கிய தேசிய  கட்­சியின் உறுப்­பி­னர்­களின் நிலைப்­பாடு குறித்து கலந்­து­ரை­யா­டினோம். சக­லரும் இணங்கும் வகை­யி­லேயே தீர்­மா­னங்­களை எடுக்க வேண்டும். கட்­சிக்குள் முரண்­பா­டு­களை வைதுக்­கொண்டு கூட்­ட­ணி­களை அமைக்க முடி­யாது.

ஆக­வேதான் முதலில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் யாப்பில் உரிய திருத்­தங்­களை முன்­னெ­டுத்து பொது இணக்­கப்­பாடு ஒன்­றினை எட்­டிய பின்னர் பொதுக்­கூட்­ட­ணியை அமைக்க முடியும் என்ற தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அதற்­கான இணைக்­கத்தை  தெரி­வித்­துள்ளார். ஆகவே இந்த ஒரு சில தினங்­களில் கூட்­ட­ணிக்­கான யாப்பு திருத்­தங்­களால் முன்­னெ­டுக்­கப்­பட்ட பின்னர் விரைவில் பொதுக் கூட்­ட­னியை அமைப்போம் .  ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் சகல கட்­சி­க­ளி­னதும்  இணக்­கத்­துடன் புதிய யாப்பினை உருவாக்கிய பின்னர் கூட்டணியை அமைக்க சகல தரப்பும் இணைக்கம் தெரிவித்துள்ளன . நாளை (இன்று ) முன்னெடுக்கவிருந்த பொதுக் கூட்டணிக்கான கைச்சாத்து நிகழ்வையும் ஒத்திவைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.