பொது­ஜன பெர­முன, சு.க.விலி­ருந்து பலர் ஐ.தே.க.வுடன் இணையும் சாத்தியம்..!-பி.ஹரிசன்

300 0

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் ஒரு குழுவும் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் ஒரு தரப்­பி­னரும் ஐக்­கிய தேசிய கட்­சியின் கூட்­ட­ணியில் இணைய  விருப்பம் தெரி­வித்­துள்ள நிலையில்  அவர்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களை விரி­வு­ப­டுத்தும் பிர­தான நோக்­கத்தின் கார­ண­மா­கவே இன்­றைய தினம் இடம்­பெ­ற­வி­ருந்த ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மை­யி­லான ஜன­நா­யக தேசிய முன்­ன­ணிக்­கான ஒப்­பந்த நிகழ்­வு­களை ஒத்­தி­வைத்­த­தாக அமைச்சர் பி.ஹரிசன் தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மையில் பிர­தான பங்­காளிக் கட்­சி­களை இணைத்து ஜன­நா­யக தேசிய முன்­ன­ணிக்­கான ஒப்­பந்­தத்தை  செய்ய ஐக்­கிய தேசிய கட்சி தீர்­மானம் எடுத்­த­போ­திலும் இறுதி நேரத்தில் அது ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் இது குறித்து வின­விய போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

ஜன­நா­யக தேசிய முன்­ன­ணிக்­கான ஒப்­பந்த நிகழ்வு இன்று இடம்­பெ­ற­வி­ருந்த போதிலும் அது ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது. உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அதனை  எமக்கு அறி­வித்­துள்­ளனர். குறிப்­பாக ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மையில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் கட்­சிகள் மற்றும் புதிய கட்­சி­களை இணைத்து கூட்­ட­ணியை அமைக்க தீர்­மானம் எடுக்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும்  ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணிக் கட்­சியின் சிலர் உறுப்­பி­னர்கள் எம்­முடன் இணைந்து கூட்­ட­ணியில் பங்­கு­கொள்ள இணக்கம்  தெரி­வித்துள்­ளனர். ஆகவே பேச்­சு­வார்த்­தை­களை விரி­வு­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது.

பாரிய கூட்­ட­ணியை அமைக்கும் வேளையில் அதன் செய­லாளர் ஐக்­கிய தேசிய கட்சி போன்று பிர­தான கட்­சியின் உறுப்­பி­ன­ராக இருக்க வேண்டும் என்ற நியா­ய­மான கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. எமது நிலைப்­பாடும் அது­வா­கவே இருக்­கின்­றது. பொதுச்­செ­ய­லாளர் மிகவும் பொறுப்­பான ஒரு­வ­ராக இருக்க வேண்டும்.

எனவே எமது கட்­சியின் ஒரு­வரை நிய­மிக்க வேண்டும் என்­பதே எமது நிலைப்­பா­டாகும். இதனை நாம் கட்­சியின் தலை­மை­யிடம் கூறினோம். அத்­துடன் ஜனா­தி­பதி வேட்­பாளர் குறித்து இப்­போது முந்­திக்­கொள்ள வேண்­டிய அவ­சியம் இல்லை என்றே நினைக்­கின்றேன். எமது தாப்பில் தகு­தி­யான பல­மான வேட்­பா­ளர்கள் உள்­ளனர்.

ஆகவே அவர்­களில் ஒரு­வரை கள­மி­றக்கி தேர்­தலில்  வெற்­றி­பெற முடியும். மாகா­ண­சபைத் தேர்­தலை நடத்­தி­யாக வேண்டும் என்ற முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டும் எல்லை நிர்ணயத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ள காரணத்தினாலும் அடுத்ததாக நடத்தப்பட வேண்டிய தேர்தல் நெருங்கியுள்ள காரணத்தினாலும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதே சிறந்ததாக அமையும். ஆகவே வரும் நாட்களில் எமது வேட்பாளர் பெயர் வெளிவரும் என்றார்.