பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓல்ட் தோட்டப்பகுதியில் சட்ட விரோதமான முறையில் மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
35 மற்றும் 38 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணிக்க கல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

