அதிவேக நெடுஞ்சாலையில் இந்த வருட இறுதிக்கு முன்னர் 3 அதிவேக நெடுஞ்சாலைகள் நிர்மானப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு பொது மக்களிடம் கையளிக்கப்படுமென்று நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி மற்றும் கனியவள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மாத்தறை, ஹம்பாந்தோட்டை அதிவேக நெடுங்சாலை கடவத்த – கெரவலபிட்டிய அதிவேக வீதி மற்றும் மீறிகம – குருநாகல் அதிவேக நெடுஞ்சாலை ஆகிய நெடுஞ்சாலைகள் பொது மக்கள் பாவனைக்காக திறக்கப்படவுள்ளன.
கடவத்த – கெரவலப்பிட்டிய வீதி திறக்கப்பட்ட பின்னர் கட்டுநாயக்கவில் இருந்து நேரடியாக நெடுஞ்சாலையில் பயணிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றது.
இதே போன்று ரயில் பாதையில் கொங்கிறிட் கோபுரம் அமைக்கப்பட்டு அதன் மீது நிர்மானிக்கப்பட்டு வரும் அதிவேக நெடுங்சாலை அதாவது கடவத்த – கெரவலபிட்டிய அதிவேக நெடுங்சாலை ஊடாக நிர்மானிக்கப்பட்டுவரும் ´அதிவேக-அதிவேக´ என்ற இடைமாறுவதற்காக மாத்தறை ஹம்பாந்தோட்டை வீதியில் இது அமைக்கப்பட்டு வருகின்றது.

