வடக்கு மாகாண சபையின் பேரவைச் செயலகத்திற்கு புதிய இணையத்தளம்(காணொளி)

402 0

npவடக்கு மாகாணசபையின் பேரவைச் செயலக இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வும் இலத்திரனியல் மற்றும் சட்டவள நிலைய திறப்பு விழாவும் இன்று நடைபெற்றது.

ஆசிய மன்றத்தின் நிதி உதவியில் அமைக்கப்பட்ட இணையத்தள இலத்திரனியல் நூலகத் திறப்பு விழாவும் அங்குரார்ப்பண நிகழ்வும் இன்று வடக்கு மாகாணசபையில் அவைத்தலைவர் சீவி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது.

மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு முதலாவதாக இணையத்தள இலத்திரனியல் நூலகத்த்தை வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் நாடாவெட்டித் திறந்து வைத்தார்.

தொடர்ந்து வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனால் இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

நிகழ்வில் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடக்கு மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா, வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், சர்வேஸ்வரன், அரியரட்ணம், பரஞ்சோதி, ஆனல்ட், கஜதீபன், அகிலதாஸ், வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன், ஆசிய மன்றத்தின் பணிப்பாளர் கலாநிதி கோபகுமார், சிரேஸ்ட தொழில்நுட்ப ஆலோசகர் ஏ.சுபாஸ்கரன் மற்றும் தொழில்நுட்ப நிபுணர் சாள்ஸ் சசிகரன் ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.