மட்டக்களப்பு அபிவிருத்திக்குழுவில் றிசாத்பதியூதினை இணைக்க முடியாது-சீ.யோகேஸ்வரன்(காணொளி)

387 0

yokeswaranஅமைச்சர் றிசாத்பதியூதினை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவில் இணைக்கும் நடவடிக்கைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கடுமையான கண்டனத்தினை தெரிவித்துள்ளதுடன் அவ்வாறு அவர் அபிவிருத்திக்குழுவில் இணைவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டது எனவும் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிநிதியும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவராக உள்ளபோது, றிசாத்பதியூதினையும் நியமிக்கவேண்டிய அவசியம் இல்லையென மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.