பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் உபவேந்தர்கள் சந்திப்பு!

268 0

நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உபவேந்தர்கள் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இடையில் பேச்சுவார்த்தையொன்று இன்று இடம்பெற்றது.

நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள், எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் பல்கலைக்கழக உபவேந்தர்கள் 14 பேர் கலந்துகொண்டுள்ளனர்.