மைதானமாக மாறிய பராக்கிரம சமுத்திரம்!

343 0

பொலன்னறுவை மாவட்டத்தில் நிலவும் அதிக வரட்சியுடனான வானிலை காரணமாக, பராக்கிரம சமுத்திரம் நீரின்றி வற்றியுள்ளது.

இந்நிலையில், குறித்த சமுத்திரத்தை அப்பகுதி இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்காகப் பயன்படுத்தி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

20 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டு விளங்கும் பராக்கிரம சமுத்திரம், தற்போது நீரின்றி வற்றிக் காணப்படுகிறது. பல வருடங்களுக்குப் பின்னர் பராக்கிரம சமுத்திரம் இவ்வாறு வரட்சியால் வற்றிக் காணப்படுவதாக, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், பராக்கிரம சமுத்திரத்தை நம்பி விவசாயச் செய்கையில் ஈடுபடும் நூற்றுக்கணக்கான விவசாயிகள், விவசாயச் செய்கையை மேற்கொள்ள பெரும்  இடர்பாடுகளை எதிர்நோக்கியுள்ளர்.