தீக் காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு!

238 0

பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் வயல்வெளியில் பெண்ணொருவரின் சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.

அரலகங்வில – சிரிபுர – யக்குரே பகுதியில் வயல்வெலியில் தீக்காயங்களுடக் பெண்ணொருவரின் சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ரத்னாயக்க முதியன்சேலாகே கருணாவதி எனப்படும் 54 வயதுடைய  பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

அரலகங்வில இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்