தீக்காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

297 0
சிறிபுர, யக்குரே பகுதியில் உள்ள வயல்வெளி ஒன்றில் இருந்து தீக்காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

அரலகங்வில பொலிஸாரிற்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

54 வயதுடைய பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.