ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதியதில் ஒருவர் பலி

251 0

கொழும்பிலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயிலுடன் முச்சக்கரவண்டி ஒன்று மோதி விபத்தக் குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

களுத்துறை வடக்கு, நாகஸ்ஹந்திய ரயல் கடவைப் பகுதியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி மற்றும் முச்சக்கர வண்டியில் பயணித்த நபர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் முச்சக்கர வண்டியில் பின்புறத்தில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரவிக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த விபத்தில் உயிரிழந்தவர் களுத்துறை வடக்கு வெலிகொட பகுதியில் வசித்த 50 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதையடுத்து விபத்து குறித்து களுத்துறை வடக்கு பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.