ராஜித சேனாரட்ன பொய் கூறுவதாக மஹிந்த கூறுகிறார்.

322 0

rajitha-mahinda_0-300x167-720x480-600x450சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன பொய் கூறுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லவில் அமைந்துள்ள காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறுவதனைப் போன்று டுபாய் வங்கிக் கணக்கு பற்றி அல்லது எனது பிள்ளைகள் பற்றி கூட ஜனாதிபதி மைத்திரியுடன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பேசியதில்லை.

ராஜித சேனாரட்ன போன்றவர்களின் பொய்ப் பிரச்சாரத்திற்கு பதிலளிக்க நான் விரும்பவில்லை.

எனினும், மக்கள் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதனைக் கூறுகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.