பவித்ரா வன்னியாராச்சி , நீதவான் அருணி ஆர்டிகலவினால் எச்சரிக்கப்பட்டார்

404 0

01.04.2015-720x480-720x480பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி , கொழும்பு மாவட்ட மேலதிக நீதவான் அருணி ஆர்டிகலவினால் கடுமையாக எச்சரிக்கப்பட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த போது, தனது வழக்கறிஞருக்கு ஆலோசனை வழங்க முற்பட்டமையாலேயே அவர் எச்சரிக்கைக்கு உள்ளாகியுள்ளார்.

வழக்கு விசாரணையின் போது அவர் தொடர்ச்சியாக தன் சார்பில் ஆஜராகிய வழக்கறிஞருக்கு முறையற்ற விதத்தில் ஆலோசனை வழங்கி வந்துள்ளார். இதனைக் கண்ட நீதவான் , எம்.பி.க்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், எம்.பி யும் ஒரு வழக்கறிஞர் என்ற வகையில் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் அறிந்திருக்கவேண்டுமென நீதவான் சுட்டிக்காட்டியுள்ளார்

Leave a comment