அப்பாவிப் பொதுமக்கள் 41 பேர்கள் பலியாகவும் மேலும் பலர் காயமடையவும் காரணமாக அமைந்த துருக்கியின் தலைநகர் இஸ்தான்பூல் நகரின் அதாதுர்க் சர்வதேச விமான நிலையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வன்மையாகக் கண்டித்துள்ளார்.
சாதாரண பொது மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இத்தகைய மிலேச்சத்தனமான பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியாக கூட்டாக நடவடிக்கை எடுக்கவேண்டியதன் அவசியத்தை தாம் மீண்டும் வலியுறுத்துவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
துருக்கி நாட்டின் ஜனாதிபதி ரஜப் தைய்யிப் அர்துகான் அவர்களுக்கு அனுப்பிவைத்துள்ள விசேட அனுதாபச் செய்தியிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
இந்த கோழைத்தனமான மிலேச்சப் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் துருக்கி அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் தமது ஆழ்ந்த கவலைகளையும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், உயிரிழந்தவர்களுக்கு அனுதாபங்களைத் தெரிவித்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய தாம் தாம் பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

