ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு

219 0

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஊழியர்கள் நாளை நள்ளிரவு 12 மணி முதல் 24 மணித்தியாலம் சுகயீன விடுமுறையில் செல்ல தீர்மானித்திருப்பதாக தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.

அரசாங்கத்திடம் மூன்று பிரதான கோரிக்கைகளை முன்வைத்து கடந்த வாரம் 48 மணித்தியால பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டோம். எனினும் அரசாங்கம் அதற்கு எவ்வித தீர்வினையும் வழங்கவில்லை.

இந்த விடயத்தில் அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் அழுத்தம் பிரயோகிப்பதற்காகவே இந்த தீர்மானத்தை எடுத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.