பெண்ணை கடத்திய வழக்கு – இருவருக்கு விளக்கமறியலில்

221 0

திருகோணமலை, மொறவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பெண் ஒருவரை கடத்திச் சென்ற வழக்குடன் தொடர்புடைய இருவர் வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காததால் 30 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்எம். ஹம்ஸா ) உத்தரவிட்டுள்ளார்.

மஹதிவுல்வெவ, மொறவெவ பகுதியைச் சேர்ந்த 41 மற்றும் 26 வயதுடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் காதலித்த பெண் ஒருவரை கடத்திச் சென்றதாக தெரிவித்து சந்தேக நபர்களுக்கு எதிராக திருகோணமலை நீதிமன்றில் வழக்கு நடைபெற்று வந்தது.

குறித்த வழக்கின் போது, வழக்குத் தவனைகளுக்கு சமூகமளிக்காது இருந்த நிலையிலே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர் பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.