மொரட்டுவையில் வேன் விபத்து

254 0

மொரட்டுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – காலி வீதியில் கடுபெத்த சந்தியில் இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 8 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு – காலி வீதிக்கூடாக கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த வேன் எதிர்திசையில் வந்த வேனுடன் மோதியதாலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் வேன் சாரதிகள் இருவர் உள்ளிட்ட மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதோடு, அவர்கள் கலுபோவில மற்றும் பாணந்துரை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

குறித்த சம்பவம் தொடர்பில் மொரட்டுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.