ஆறு அமைச்சர்களுக்கு எதிராக முறைப்பாடு

315 0

number-6நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஆறு அமைச்சர்களுக்கு எதிராக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது. எதிர்வரும் இரண்டு வார காலப் பகுதிக்குள் குறித்த அமைச்சர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட உள்ளதாகவும்  கூட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.

கொழும்பு, கண்டி, களுத்துறை, ரத்தினபுரி மற்றும் வன்னி ஆகிய மாவட்டங்களை பிரதிநிதித்துவம் செய்யும் அமைச்சர்களுக்கு எதிராக இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட உள்ளது.