அரசாங்க விதை உற்பத்திப் பண்ணையில் தீ விபத்து!

272 0

வவுனியாவில் உள்ள விவசாயத் திணைக்களத்துக்குச் சொந்தமான அரசாங்க விதை உற்பத்திப் பண்ணையில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

வவுனியா ஏ9 வீதிக்கு அண்மையில் உள்ள குறித்த விதை உற்பத்திப் பண்ணை வளாகத்தில் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் திடீரென தீ பரவியுள்ளது. இதன் காரணமாக வயல் நிலங்கள் தீக்கிரையாகியுள்ளன.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த வவுனியா தீயணைப்பு பிரிவினர் ஒரு மணிநேர போராட்டத்தின் பின்னர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

மேலும் இந்த தீப்பரவல் காரணமாக ஏற்பட்ட புகையினால், ஏ9 வீதியில் சிறிதுநேரம் பயணத்தடையும் ஏற்பட்டதாக பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.

சிறுபோக அறுவடையின் பின்னரான காலப்பகுதியில் குறித்த விபத்து ஏற்பட்டதனால் பாரிய அழிவுகள் தவிர்க்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.