நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

291 0

no-strikeநல்லூர் பிரதேச சபையின் உப அலுவலக பொறுப்பதிகாரி மீது பொதுமகன் ஒருவர் தாக்குதல் நடாத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச சபை ஊழியர்கள் இரு மணிநேரம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். நல்லூர் பிரதேச சபையின் உப அலுவலக பொறுப்பதிகாரி து.சசிக்குமார் மீது கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் பொதுமகன் ஒருவர் தாக்குதல் நடாத்தி இருந்தார்.

அலுவலக நேரத்தில் அலுவலகத்தில் கடமையில் இருந்த பொறுப்பதிகாரி மீது அலுவலகத்தினுள் அத்துமீறி உள்நுழைந்த நபர் தாக்குதல் மேற்கொண்டார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அதனை அடுத்து அன்றைய தினம் மாலை தாக்குதல் நடாத்திய சந்தேக நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யபட்ட சந்தேக நபர் மறுநாள் புதன்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த ப்பட்டு நீதிமன்றினால் பிணையில் செல்ல அனுமதிக்கப் பட்டு இருந்தார். அந்நிலையில் குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வியாழக்கிழமை நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் இரு மணி நேர பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.