சமன் திஸா­நா­யக்கவின் கோரிக்கையை நிராகரித்த கோட்டை நீதிவான்

261 0

தேசிய பொலிஸ் ஆணைக் குழு வின் செய­லரும் முன்னாள் பாது­காப்பு அமைச்சின் மேல­திக செய­ல­ரு­மான சமன் திஸா­நா­யக்க தாக்கல் செய்த முன் பிணை கோரிக்கையை கோட்டை நீதிவான் நீதிமன்றம் நிரகாரித்துள்ளது.

மிதக்கும் ஆயுத களஞ்­சி­ய­சாலை விவ­காரம் தொடர்பாக சமன் திஸா­நா­யக்க உள்­ளிட்ட எட்டு பேரைக் கைது செய்து நீதி­மன்றில் ஆஜர் செய்­யு­மாறு சட்ட மா அதிபரும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணியுமான தப்­புல டி லிவேரா, பதில் பொலிஸ் மா அதிபர் சந்­தன விக்­ர­ம­ரத்­ன­வுக்கு ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்தார்.

இந் நிலையிலேயே எவன் விவாகரத்தில் சமன் திஸாநாயக்க தன்னை கைதுசெய்வதை தடுக்க தடை உத்தரவு கோரி தாக்கல் செய்த முன் பிணை கோரிக்கையையே கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க நிராகரித்துள்ளார்.