தேசிய பொலிஸ் ஆணைக் குழு வின் செயலரும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலருமான சமன் திஸாநாயக்க தாக்கல் செய்த முன் பிணை கோரிக்கையை கோட்டை நீதிவான் நீதிமன்றம் நிரகாரித்துள்ளது.
மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை விவகாரம் தொடர்பாக சமன் திஸாநாயக்க உள்ளிட்ட எட்டு பேரைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு சட்ட மா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான தப்புல டி லிவேரா, பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.
இந் நிலையிலேயே எவன் விவாகரத்தில் சமன் திஸாநாயக்க தன்னை கைதுசெய்வதை தடுக்க தடை உத்தரவு கோரி தாக்கல் செய்த முன் பிணை கோரிக்கையையே கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க நிராகரித்துள்ளார்.