நாட்டிலிருந்து வெளியேறியது நிலத்தடியைக் கண்காணிக்கும் விமானம்!

202 0

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட நிலத்தடியைக் கண்காணிப்பது உள்ளிட்ட விசேட செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் விமானம் நாட்டிலிருந்து புறப்பட்டு செல்லவுள்ளது.

குறித்த விமானம் இன்று மும்பை நோக்கி புறப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

Basler BT-67  என்ற விமானம் கடந்த சனிக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இதனை பயன்படுத்தி சுமார் 1000 மீற்றர் ஆழத்தில் நிலத்திற்கடியில் உள்ளவற்றை கண்காணிக்க முடியும்.

இந்த விமானம் இந்தோனசியாவிலிருந்து நாட்டை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.