ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் உடனடியாக தீர்மானம் எடுக்கவேண்டும்-வாசு

234 0

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பிரதான கட்சிகள் மெளனம் காத்துவருகின்றன. இது அவர்களுக்கிடையில் திரைமறைவில் தேர்தலை பிற்படுத்துவதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

அத்துடன் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் இன்று 9 ஆம் திகதி இடம்பெறும். அப்போது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் உடனடியாக தீர்மானம் எடுக்கவேண்டும் என நாங்கள் அழுத்தம் கொடுப்போம் என்றார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.