சீகிரியாவில் புதையல் தோண்டிய ஒருவர் கைது

327 0

சீகிரியா பிரதேசத்தில் புதையல்  தோண்டியதாக சந்தேகிக்கப்படும்  ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் தம்புள்ளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சந்தேக நபர் சீகிரிய பிரதேசத்தை சேர்ந்த 45 வயதான நபர் என தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது குறித்த சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் வழங்கிய தகவலுக்கமைய குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.