திடீர் தீ பரவலினால் மரகலகந்த வனப்பகுதியில் பெரும் பாதிப்பு

309 0

மொனராகலை – மரகலகந்த வனப்பகுதியில் ஏற்பட்ட திடீர் தீபரவலினால் பெருமளவான வனப்பகுதி பாதிப்படைந்துள்ளதாக மொனராகலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

நேற்று மாலை பரவியுள்ள தீயைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரும் , இராணுவத்தினரும் ஈடுபட்ட போதிலும் இன்று மாலை வரை தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

தீயணைப்பு பணிக்கு விமான படையின் பெல் 212 ஹெலிக்கப்டரும்; பயன்படுத்தப்பட்டது.

தீப்பரவலுக்கான காரணம் கண்டறியப்படாத நிலையிலே பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.