நீரில் மூழ்கிக் கரையொதுங்கிய சடலம் இனங்காணப்பட்டுள்ளது

378 0

நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில்  கரையொதுங்கியதாகக் கூறப்பட்ட  ஆண்  ஒருவரின்  சடலம் இனங்காணப்பட்டுள்ளது.

நேற்று சனிக்கிழமை(6) மாலை கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பள்ளி கடலோரமாக இனந்தெரியாத ஆண் ஒருவரின்  சடலம் ஒன்று மீட்கப்பட்டு கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின்  சவச்சாலையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இவ்வாறு உயிரிழந்தவர் கல்முனைக்குடி-2  28 பி கிறீன் பில்ட் வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்த  முஹம்மட் நஸ்லான்(வயது-34) என்ற  ஒரு பிள்ளையின் தந்தையென இனங்காணப்பட்டுள்ளது.

இதையடுத்து சடலமாக மீட்கப்பட்டவர் அண்மைக் காலமாக   குடும்பப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து அடிக்கடி சச்சரவு செய்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது   சடலம் பிரேதப் பரிசோதனையின் பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கபடப்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.