ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் இராஜினாமா!

229 0

ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அவர் தனது இராஜினாமா கடிதத்தை போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் எல்.பி. ஜயம்பதியிடம் நேற்றைய தினம் கையளித்துள்ளார்.

கடமை நேரத்தில் மதுபோதையில் இருந்ததற்காக பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட தொழிற்சங்க செயலாளரை மீண்டும் பணியில் அமர்த்துமாறு போக்குவரத்து அமைச்சு அதிகாரிகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே இவர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.