அனுமதி பத்திரமற்ற பேருந்துகளுக்கு தண்டப்பணம் 5 இலட்சம் ரூபா

340 0

அனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு ஆணைக்குழுவினால் 5 இலட்சம் ரூபா வரையில் தண்டப்பணம் அனுமதிக்கப்பட்டிருந்தது.

தேசிய போக்குவரத்து சபைத் தலைவர் ஜனக மல்லிமாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மாகாணங்களில் வீதி அனுமதிப்பத்திரம் இன்றி 200 பேருந்துகள் சேவையில் ஈடுபடுகின்றன. இது மேலும் அதிகரிக்கப்படும். இந்த அனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுவதனால் அனுமதிப்பத்திரத்துடன் சேவையில் ஈடுபடும் பேருந்து உரிமையாளர்களுக்கு பெரும் அநீதி இழைக்கிப்படுகின்றது. இவர்கள் அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் செலுத்தியே சேவையில் ஈடுபடுகின்றன.

இருப்பினும் வீதியில் அனுமதிப்பத்திரம் இன்றி பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவோர் குறிப்பிட்ட நேரங்களின்றி சேவையில் ஈடுபடுகின்றனர். இதனால் பஸ் நடத்துநர்கள் உள்ளிட்டோர் மத்தியில் மோதல்கள் இடம்பெறுகின்றன.

விசேடமாக இவ்வாறு பெரும் எண்ணிக்கையான பஸ்கள் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்புகளுக்கு இடையே சேவைகளில் ஈடுபடுகின்றன. குறிப்பாக இந்த பேருந்துகள் குறிப்பிட்ட பஸ் நிலையங்களுக்குள் உள்வாங்கப்படுவதில்லை.

குறிப்பாக வெள்ளவத்தை, மருதானை, தெஹிவளை, கொள்ளுப்பிட்டி ஆகிய இடங்களில் இருந்து பஸ் பயணத்தை ஆரம்பிக்கின்றனர். இது பாரிய அநீதியாகும். பஸ் அனுமதிப்பத்திரம் உள்ள பெரும் எண்ணிக்கையான முறைப்பாடுகளை சமர்ப்பிக்கின்றன.

இதன் காரணமாக 250,000 ரூபாவாக உள்ள தண்டப்பணத்தை 500,000 ரூபாவாக அதிகரிப்பது காலத்திற்கேற்ப நடவடிக்கையாகும் என்று தேசிய போக்குவரத்து சபைத் தலைவர் ஜனக மல்லிமாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.