இலங்கைக்கு தூக்குத் தண்டனை பொருத்தமானது அல்ல- சமல்

302 0

பௌத்த நாடான இலங்கையில் தூக்குத் தண்டனையை மீண்டும் செயற்படுத்துவது தவறான ஒரு முன்மாதிரி என்பதனால், தான் அதனைச் சரிகாணப் போவதில்லையென முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தூக்குத் தண்டனையை இல்லாமல் செய்தது பண்டாரநாயக்க. இதன்பின்னர், பண்டாரநாயக்க கொலை செய்யப்பட்ட போது மீண்டும் தூக்குத் தண்டனையை நடைமுறைக்கு கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்பட்ட போதே, அப்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்த பெரும்பாலானவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தது நினைவில் இருக்கின்றது.

இதனால், அந்த தூக்குத் தண்டனையை மீண்டும் கொண்டு வருவது சிறந்தது அல்ல என அவர் மேலும் கூறியுள்ளார்.