ரிசாட் பதியுதீனிடம் இன்று 3 மணி நேரம் வாக்குமூலம்- பொலிஸ்

281 0

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனிடம் பொலிஸ் திட்டமிட்ட குற்றத்தடுப்புப் பிரிவு இன்று (02) சுமார் 3 மணிநேர காலம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பொலிஸ் பிரிவின் அறிவிப்பின் பிரகாரம் முன்னாள் அமைச்சர் இன்று காலை 9.30 மணிக்கு அப்பிரிவில் ஆஜராகியுள்ளார். இவரிடம் 12.45 மணி வரையில் விசாரணை இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிராக ஊடகங்களில் முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக விசாரணை நடாத்துமாறு அவரினால் பொலிஸ் தலைமையகத்தில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக இன்றைய தினம் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.