சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு!

208 0

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று உயர்ந்தது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன.  சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த இந்த நடைமுறை கடந்த ஆண்டு கைவிடப்பட்டு தினந்தோறும் என்ற அடிப்படையில் பெட்ரோல், டீசல் விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டது.
எனினும், கடந்த ஆண்டு இவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்றது.  இதில், பெட்ரோல் விலை ரூ.85க்கும் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டது வாகன ஓட்டிகளுக்கு இடையே கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது.  இதன்பின் பெட்ரோல் விலை சற்று குறைய தொடங்கியது ஆறுதலை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.  பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து லிட்டர் ஒன்றுக்கு 9 காசுகள் உயர்ந்து ரூ.73.10க்கும், டீசல் விலை 9 காசுகள் உயர்ந்து ரூ.67.90க்கும் விற்பனை செய்யப்படுகிறது.