விசா முடிவடைந்த பின்னரும் நாட்டில் 6782 வெளிநாட்டவர்கள்!

313 0

வெளிநாட்டவர்கள் 6782 பேரின் விசா காலம் முடிவடைந்த பின்னரும் நாட்டில் தங்கியிருந்தவர்களை வெளியேற்றப்பட்டதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

விசாகாலம் முடிவடைந்த பின்னரும் நாட்டில் தங்கியிருந்த 492 பேர் கடந்த ஐந்த மாதக் காலப்பகுதியில் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இது வரையில் விசா அனுமதி காலத்திற்கும் அதிகாமான நாற்களில்  6782 வெளிநாட்டவர்கள் நாட்டில் தங்கியிருப்பதுடன் இவர்களுள் 1670 பேர் ஐக்கிய நாடுகள் அகதிகள் அலுவலகததின் பதிவு செய்யப்பட்டுள்ள அகதிகளாவார்கள் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது வரையில் விசா அனுமதி பத்திரம் கால எல்லை முடிந்த பின்னரும் நாட்டில் தங்கியிருந்த வேளையில் கைது செய்யப்பட்ட 152 பேர் மிறியானை குடிவரவு குடியகல்வு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.