இன்று நள்ளிரவு முதல் அடுத்த 24 மணிநேரம் வரை புகையிரத ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தனர் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானத்துள்ளனர்.
வேதன பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி புகையிரத ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினர் கடந்த வாரம் முன்னெடுத்த 48 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தின் தொடர்ச்சியாகவே இவர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் நோக்குடன் ஓய்வு பெற்ற புகையிரத சேவை ஊழியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான வேலைத்திட்டமொன்றை மேற்கொள்ள அரசாங்கம் உத்தேசித்திருப்பதற்கும் இவர்கள் விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

