புத்தள மீனவர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம் (காணொளி)

369 0

set-02-still002கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று புத்தள மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புத்தளம் கல்லடி மீனவக்குடும்பங்கள் இணைந்து குறித்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயற்சித்தனர்.

இதனைத் தடுப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகைக்குண்டுகளுடன் தயார் நிலையில் இருந்தநிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் தொடர்ந்து வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கொழும்பு நகரமண்டப பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் ஜனாதிபதி செயலகத்தால் மீனவப்பிரிதிநிதிகள் 5 பேர் அழைத்துச் செல்லப்பட்டதுடன், தொடர்ந்து மீனவர்களின் பிரச்சினை தொடர்பிலும் கேட்டறிந்து கொள்ளப்பட்டது.

இதன்போது புத்தளம் கடல்பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழையும் மீனவர்களைக் கட்டுப்படுத்துமாறு மீனவர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

இந்நிலையில், மீனவர்களின் கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி செயலகத்தால் அறிவிக்கப்பட்ட நிலையில், மீனவர்கள் தமது போராட்டத்தைக் கைவிட்டுச் சென்றனர்.