ஜீ.எஸ்.பி. பிளஸ் கிடைக்கும் – டொனால்ட் டஸ்க்

440 0

downloadஇழந்த ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீளப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை இலங்கை நெருக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்க் இதனைத் தெரிவித்துள்ளார்.

பெல்ஜியம் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தூதுக்குழு, ப்ரசல்ஸ் நகரில் வைத்து டொனால்ட் டஸ்க்கை சந்தித்திருந்தது.

இதன்போது அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

ஏகாதிபத்தியத்துள் சிக்கி இருந்த இலங்கை மீட்கப்பட்டு தற்போது ஜனநாயகம் ஊக்கவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இலங்கைக்கு இந்த வரிச்சலுகையை வழங்குவதற்கு தாம் பூரண ஒத்துழைப்பை வழங்கவிருப்பதாக டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.