தமிழ் மக்களை ஏமாற்றி சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒற்றையாட்சிக்கு ஆதரவளிக்கும் இரகசிய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-
நாட்டில் யுத்தம் நிறைவடைந்தும், மஹிந்த ராஜபக்ச அரசு தோற்கடிக்கப்பட;ட பின்னரான தற்போதைய நிலையில் ஒற்றையாட்சியின் கீழ் பதின்மூன்றாம் திருத்த சட்டத்தின் அடிப்படையில் தான் தமிழர்களுக்கான தீர்வை சிறிலங்கா அரசு வழங்க போகின்றது என நாம் பலமுறை கூறி வந்துள்ளோம். அது தற்போது நிதர்சனமாகி வருகின்றது.
குறிப்பாக ஒற்றையாட்சிக்கு தமிழர்களே ஆதரவளித்தார்கள் என்ற கயமைத்தனமான அரசியலை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பில் உடனடியாக மக்கள் விழிப்படைய வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் நாம் ஏமாற்றப்படுவது யாராலும் தடுக்க முடியாது என்றார் அவர்.
இந்த ஊடக சந்திப்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொது செயலாளர் செல்வராஜா கஜேந்திரனும் கலந்து கொண்டிருந்தார்.
- Home
- முக்கிய செய்திகள்
- ஒற்றையாட்சிக்கு ஆதரவளிக்கும் இரகசிய செயற்பாடுகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

