சுயாதீன ஆணைக்குழுக்களை யாரும் நெறிப்படுத்தக்கூடாது-துரைராஜசிங்கம்(காணொளி)

480 0

சுயாதீன ஆணைக்குழுக்களை யாரும் நெறிப்படுத்த முயன்றால் அதன் சுயாதீனத்தன்மையினை அக்குழு ,ழந்துவிடும் என்று கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட முனைத்தீவு சக்தி வித்தியாலயத்தில் கற்கை வள நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே ,வ்வாறு தெரிவித்தார்.

அரச தலைவரோ வேறு யாரோ சுயாதீன ஆணைக்குழுக்களை நெறிப்படுத்த முயன்றால் அது அதன் சுயாதீனத்தன்மையினை ,ழந்துவிடும் என்று குறிப்பிட்ட கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளருமான கி.துரைராஜசிங்கம், அந்தவகையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை 19வது திருத்தச்சட்டத்தை அசைத்துவிடக்கூடாது என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கவனமாகவுள்ளது என்றும் குறிப்பிட்டார்.