போலி நாணயத் தாள்களுடன் இருவர் கைது

264 0
போலி நாணயத் தாள்களை வைத்திருந்த இரண்டு பேர் ஹசலக, உடுதக பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹசலக பொலிஸ் அதிகாரிகளால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து போலி 1000 ரூபா நாணயத்தாள்கள் மூன்று மீட்கப்பட்டுள்ளது.

ஹசலக பிரதேசத்தைச் சேர்ந்த 26 மற்றும் 27 வயதுடைய இரண்டு இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று அவர்கள் மஹியங்களை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.