கூட்டு எதிரணி பெப்ரல் அமைப்பிடம் வலியுறுத்தல்

316 0

dinesh-gunawardanaஉள்ளூராட்சி மன்ற தேர்தலை விரைவில் நடத்துமாறு தேர்தலுக்கான திகதியை விரைவில் அறிவிக்குமாறும் நல்லாட்சி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு பெப்ரல் அமைப்பு மற்றும் டிரான் பேரன்சி இன்டர் நெஸனல் நிறுவனத்தின் பிரதிநிதிகளிடத்தில் கூட்டு எதிரணி வலியுறுத்தியுள்ளது.

கூட்டு எதிரணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஸ் குணவர்தன குறித்த அமைப்புக்களின் பிரதிநிதிகளை நீதியான தேர்தலுக்கான சுயாதீன அமைப்பான பெப்ரல் அமைப்பினை மத்திய நிலையத்தில் சந்தித்தார்.

அ தனை தொடர்ந்தே அவர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

தேர்தலை பிற்போடுவது ஜனநாயக விரோத செயலாகும்.

மக்களை தொடர்ந்தும் ஏமாற்றாது தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.