ரந்தனிகல நீர்த்தேக்கப் பகுதியிலுள்ள வனப்பகுதியில் தீ

197 0

ரந்தனிகல – மஹியாங்கனை பிரதான வீதியை அண்மித்து அமைந்துள்ள நீர்தேக்கத்திற்கு அப்பால் காணப்படும் வனப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.இந்த தீப்பரவல் காரணமாக அந்த வனத்தில் இது வரை 3 ஏக்கர் வரையான வளப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது.

வனப்பகுதிக்கு மிருக வேட்டைக்காக சென்றவர்கள் இவ்வாறு தீ வைத்திருக்க கூடும் என வனவள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

காற்றின் வேகம் காரணமாக தீ அதிகளவில் பரவியதால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.வேகமாக பரவிவரும் தீ காரணமாக அரியவகை மூலிகைகள் விலங்கினங்கள் நீரூற்றுக்கள் போன்றன அழிந்து போயிருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.