யாழ் மணியந்தோட்டம் பகுதியில் அன்னை வேளாங்கண்ணியின் சிலையை இனந்தெரியாதோர் நேற்று இரவு உடைத்துள்ளனர்.

 

மணியந்தோட்டம் பகுதியில் உள்ள மக்கள் வழிபட்டு வந்த வேளாங்கண்ணியின் திரு சொரூபத்தை வீதியில் போட்டு உடைத்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.