வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் பலி

507 0
களனி, பொல்ஹேன பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு 09.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் மின்சாரம் தடைப்பட்டதையடுத்து வௌிச்சத்திற்காக வைக்கப்பட்ட மெழுகுதிரி விழுந்ததால் வீட்டில் தீப்பரவியுள்ளது.

சம்பவத்தில் 74 வயதுடைய பக்கவாத நோயாளி பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், சம்பவத்தின் போது குறித்த பெண் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார்.

மின் தடைப்பட்ட போது உயிரிழந்த பெண்ணின் மகள் வீட்டில் மெழுகுதிரி ஒன்றை பற்றவைத்து விட்டு அருகில் இடம்பெற்ற நிகழ்வொன்றுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.