12 மாவட்­டங்­க­ளுக்கு சிவப்பு எச்­ச­ரிக்கை

245 0

நாட்டின் வடக்கு, வட­மத்­திய மற்றும் வடமேல் மாகா­ணங்­களில் எதிர்­வரும் ஐந்து நாட்­க­ளுக்கு மணித்­தி­யா­லத்துக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று இலங்கை வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் எதிர்வுகூறி­யுள்­ளது. அதன்­படி  குறித்த மாகா­ணங்­க­ளுக்குள் உள்­ள­டங்­கு­கின்ற 12 மாவட்­டங்­க­ளுக்கு சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், புத்­தளம், திரு­கோ­ண­மலை, பொலன்­ன­றுவை, மாத்­தளை மற்றும் குரு­ணாகல் உள்­ளிட்ட மாவட்­டங்­க­ளுக்கே இவ்­வாறு சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. ஏனைய மாவட்­டங்­களில் மணித்­தி­யா­லத்­துக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.